திக்கரை முருகப்பெருமான் ஆலயத்தில் நடைபெற்ற வன்னி மர வாழை வெட்டு அதாவது மானம்பூ திருவிழா காட்சிகள்!

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் 30/09/2017 சனிக்கிழமை மாலை 2.00 மணியளவில் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு பாலாவோடை பிரதான வீதி ஊடாக பொன்னாவளை வீதி வழியாக திக்கரை முருகப்பெருமான் ஆலயத்தில் வன்னி மர வாழை வெட்டு அதாவது மானம்பூ திருவிழாவும் மற்றும் திக்கரை அறநெறி மாணவர்களுக்கு கடந்த நல்லூர் கந்தசுவாமி ஆலய உட்சவ காலத்தில் இடம்பெற்ற போட்டிகளில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கழகத்தினால் வழங்கப்பட்ட சான்றிதழ்களும் மற்றும் பிரபல வர்த்தகர் S.V.M நிறுவனத்தினால் பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து அம்மன் தனது ஆலயத்தை வளுப்போடை வீதி வழியாக வந்தடைந்தன.