மரண அறிவித்தல்
திருமதி கதிர்காமநாதன் வேதநாயகி
காரைநகர் ஆலடியைப் பிறப்பிடமாகவும் சடையாளியை வசிப்பிடமாகவும் தற்போது ஆலடியில் வசித்து வந்தவருமான கதிர்காமநாதன் வேதநாயகி 03-09-2017 ஞாயிற்றுக்கிழமை சிவபதமடைந்து விட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சைவப்பெரியார் மகான் ச.அருணாசலம் அவர்களின் பேத்தியும் ஆசிரியர் சிவபாதம் சரஸ்வதி தம்பதிகளின் மகளும் காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் வள்ளியம்மை (பாக்கியலட்சுமி) தம்பதிகளின் மருமகளும் காலஞ்சென்றவரான கதிர்காமநாதனின்(ராசு) அன்பு மனைவியும் சிவநாயகி, பரமசிவம் (அமெரிக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரியும் காலஞ்சென்றவரான நாகேஸ்வரன் மற்றும் செந்தில்நாதன் (சுவிஸ்) காலஞ்சென்ற சுப்பிரமணியம், பிரபாகினி (அமெரிக்கா) ஆகியோரின் மைத்துனியும் காலஞ்சென்ற விஜயலட்சுமி மற்றும் கலாசோதி(கீதா) (சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகலியும் அரிகரன், அரிகரசுதன், வாருணி(சுவிஸ்) காரணி(சுவிஸ்) ஆகியோரின் பெரியதாயாரும் திவ்வியாவின் (அமெரிக்கா) மாமியாரும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் அன்னாரின் காரைநகர் ஆலடி இல்லத்தில் திங்கட்கிழமை காலை 7:00 மணியளவில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக சாம்பலோடை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் இத்தகவலை ஏற்றுக்கொள்ளவும்.
தொடர்புகளுக்கு:
சிவநாயகி(சகோதரி) – 0779789449
அரிகரன்(பெறாமகன்) – 0771275285