சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை நடாத்தும்
"தியாகத் திறன் வேள்வி 2017"
மாணவர்களுக்கான போட்டிகள் சென்ற 15,16ஆம் திகதிகளில் வெகுசிறப்பாக நடைபெற்றன.
சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் ஏற்பாட்டில் அதன் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழுவினரின் ஒழுங்கமைப்புடன் நடாத்தப்பட்டு வருகின்ற "தியாகத் திறன் வேள்வி-2017" மாணவர்களுக்கான போட்டி பரீட்சைகள் எமது சபையின் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழுவினருடன் இணைந்து காரைநகர் பாடசாலைகள் அதிபர்கள், ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் வெகு சிறப்பாக நடைபெற்றன.
கீழ் காணும் மூன்று பிரிவுகளில் போட்டி பரீட்சைகள் நடாத்தப்பட்டன.
பிரிவுகள்:
அ. பிரிவு – ஆண்டு 6, 7, 8 மாணாக்கர்
ஆ. பிரிவு – ஆண்டு 9, 10, 11 மாணாக்கர்
இ. பிரிவு – ஆண்டு 12, 13 மற்றும் கடந்த 2017 இல் பாடசாலை மூலம் க.பொ.த உயர்தர பரீட்சைக்குத் தோற்றிய மாணாக்கர்.
காரை இந்துக் கல்லூரி, சயம்பு நடராசா ஞாபகார்த்த மண்டபங்களில் 15ஆம் திகதி சனிக்கிழமை போட்டி எண்: நான்கு இசைப் போட்டிகள், போட்டி எண்: ஐந்து பொது அறிவுப் போட்டிகள், 16ஆம் திகதி போட்டி எண்: ஒன்று கட்டுரைப் போட்டிகள், போட்டி எண்: இரண்டு பேச்சுப் போட்டிகள், வெகு சிறப்பாக நடாத்தி முடிக்கப்பட்டுள்ளன.
போட்டி எண்: மூன்று திருக்குறள் மனனப் போட்டி
ஆ பிரிவு: ஆண்டு 4 மற்றும் 5 மாணவர்களுக்கான திருக்குறள் மனனப் போட்டி புரட்டாதி மாதம் நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம்.
போட்டிப் பரீட்சையின் விபரங்கள் பின்னர் அறியத்தருகின்றோம். நிழற்படங்களை கீழே காணலாம்.
நன்றி
"ஆளுயர்வே ஊருயர்வு"
"நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்".
இங்ஙனம்.
சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை
செயற்குழு உறுப்பினர்கள்
மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு
சுவிஸ் வாழ் காரை மக்கள்
20.07.2017