பாடசாலைச் சுகாதார மேம்பாட்டுச் செயற்திட்டம் யாழ்ற்ரன் கல்லூரியில்

வடமாகாணக் கல்வி,சுகாதார அமைச்சுக்களுடன் தீவக வலயக் கல்வி அலுவலகம் இணைந்து நடாத்தும் பாடசாலைச் சுகாதார மேம்பாட்டுச் செயற்திட்டம் 25.10.2013 வெள்ளிக்கிழமை கலை 8.30 மணிக்கு காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரியில் தீவக வலயக் கல்விப்பணிப்பாளர் தி.ஜோன்குயின்ரஸ் தலைமையில் நடைபெற உள்ளது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண மேலதிக மாகாணக் கல்விப்பணிப்பாளர் ஆ.இராசேந்திரனும் சிறப்பு விருந்தினர்களாக காரைநகர் பிரதேச செயலர் திருமதி தேவந்தினி பாபு,ஊர்காவற்றுறை பிரதேச பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி திருமதி ஜான்சி ஆனந்தராசா ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.
சுகாதார மேம்பாடு தொடர்பான விழிப்புணர்வு அறிமுகம்,மருத்துவ முகாம்,காரைநகர் கோட்டப் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகள்,மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கல் என்பன இச்செயற்றிட்டத்தில் இடம்பெற உள்ளது.