தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த ஊரி அ.மி.த.க பாடசாலை மாணவர் கௌரவிப்பு

  
காரைநகர் ஊரி அ.மி;.த.க பாடசாலையின் வரலாற்றில் ஒரே தடவையில் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் நால்வர் சித்தியடைந்த வரலாற்று சாதனை நிகழ்வைக் கொண்டாடும் நிகழ்வு பாடசாலை சமூகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

பாடசாலை அதிபர் திரு அ.சிறிதரன் தலைமையில் நடைபெற்ற இவ் விழாவிற்கு பிரதம அதிதியாக தீவக வலயக் கல்விப்பணிப்பாளர் திரு ரி;.ஜோன்குயின்ரஸ் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

அவருடன் காரைநகர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் சிறிவிக்னேஸ்வரன், ஆசிரிய ஆலோசகர் மு.கேசவன்,தியாகராசா மத்திய மகா வித்தியாலய அதிபர் திருமதி வாசுகி தவபாலன்,காரைநகர் அபிவிருத்திச் சபைச் செயலரும் அப்பிரிவுக் கிராமசேவையாளருமான இ.திருப்புகழூர்சிங்கம் மற்றும் வலந்தலை தெற்கு,வடக்கு அ.மி.த.க பாடசாலைகளின் அதிபர்களான  திருக.நேர்த்திரானந்தன்,செல்வி விமலா விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டதுடன் அப்பகுதியைச் சேர்ந்த அதிகளவான பெற்றோர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.