மரண அறிவித்தல்
திரு.கந்தையாபிள்ளை நடராஜா
(சின்னாலடி-தங்கோடை, இடைப்பிட்டி, காரைநகர்)
பிறப்பு: 26.09.1931 இறப்பு: 01.11.2016
காரைநகர், சின்னாலடி, தங்கோடையைப் பிறப்பிடமாகவும், இடைப்பிட்டியை வாழ்விடமாகவும் தற்போது திருவாண்மையூர், பாலவாக்கம், இந்தியாவில் வசித்து வந்தவருமாகிய திரு.கந்தையாபிள்ளை நடராஜா (முன்னாள் வர்த்தகர், எட்டியாந்தோட்டை) அவர்கள் வியாழக்கிழமை (01.11.2016) அன்று இந்தியாவில் சிவபதமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையாபிள்ளை-வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் மூத்த மகனும், காரைநகர், இடைப்பிட்டியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சோமநாதர் சின்னத்தம்பி-மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளின் மருமகனும், தனபாக்கியத்தின் அன்புக் கணவரும், இராஜமோகனா (ரதி, இலண்டன்), இராஜயோகன் (ரமணன், மொன்றியல், கனடா), காலஞ்சென்ற இராஜசூரியன் (ரங்கன்), இராஜாம்பிகை (ரூபி, லண்டன்), இராஜப்பிரகாஸ் (உருத்திரா, இந்தியா) ஆகியோரின் அன்புத் தந்தையும், சிவரஞ்சித்(லண்டன்), சகுந்தலா(கனடா), சதீஸ்குமார்(லண்டன்), சுமி ஆகியோரின் அன்பு மாமனாரும், மார்க்கண்டு(அவுஸ்ரேலியா), காலஞ்சென்ற பரஞ்சோதி, அன்னபூரணம்(காரைநகர்), சிவமணி(வவுனியா), பாலசுப்பிரமணியம் (ரஞ்சனாஸ்,கனடா), சண்முகராஜா(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும், சிவபாக்கியம்(கொழும்பு),காலஞ்சென்ற சிவகுருநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும், சமரன், சரித்திரா, ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் வெள்ளிக்கிழமை (04.11.2016) அன்று மதியம் 12:00 மணிக்கு திருவாண்மையூர், தமிழ்நாடு, இந்தியா இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
சிவரஞ்சித் (மருமகன், லண்டன்) 0044-(785)064-8395
இராஜயோகன்(ரமணன், மகன், மொன்றியல்,கனடா (514)835-1214, (514)683-5718, (438)877-9241
இராஜாம்பிகை (ரூபி, மகள்,லண்டன்) 0044-(741)372-6545
இராஜப்பிரகாஸ் (ருத்திரா, மகன், இந்தியா) 01191-(984)113-6341