மரண அறிவித்தல்,திரு.தம்பையா இலட்சுமணன்(லிங்கேஸ்) (பலகாடு ,காரைநகர்) (தோணிக்கல்,வவுனியா)

                           மரண அறிவித்தல்

_20160618_193246

                           திரு.தம்பையா இலட்சுமணன்(லிங்கேஸ்)


பிறப்பு:- 22.07.1946                                                                           இறப்பு:- 15.10.2016


யாழ்ப்பாணம் காரைநகர் பலகாட்டை பிறப்பிடமாகவும், வவுனியா தோணிக்கல்லை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.தம்பையா இலட்சுமணன்(லிங்கேஸ்) 15.10.2016 (சனிக்கிழமை) அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற தம்பையா, காலஞ்சென்ற சிவக்கொழுந்து ஆகியோரின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஆறுமுகம், செல்லம்மா அவர்களின் அன்பு மருமகனும், ராஜேஸ்வரியின்(ராசு) அன்பு கணவரும், விஜேந்திராவின்(விஜய்,லண்டன்) அன்பு தந்தையும், திருமகளின்(திரு,லண்டன்) அன்பு மாமனாரும் ஆவார்,

அன்னார் காலஞ்சென்ற குமாரசாமி, காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை, விசாலாட்சி, அருளம்பழம், சுந்தரலிங்கம், காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், மகேஸ்வரி, தேவராஜா, சரோஜாதேவி, தங்கபுஷ்பம்(லண்டன்), ஜெயகுமார்(லண்டன்), சந்திரகுமார் (லண்டன்) ஆகியோரின் அன்பு சகோதரரும்,
காலஞ்சென்ற பரமசிவம், திருச்செல்வம்,  சச்சிதானந்தசிவம்(சுவிஸ் )ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

​மற்றும் பாலசுப்பிரமணியம்(லண்டன்), சவுந்தராதேவியின்(லண்டன்) அன்பு சம்பந்தியும், சக்தியின்(லண்டன்) பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி கிரியைகள் 17.10.2016 திங்கள் காலை 9.00 மணியளவில் அன்னாரின் வவுனியா இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைகளுக்காக தோணிக்கல் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்

தொ.இ:-0094243241446, 00447872594418, 00447960170761
இல:-80/1, வியாசர் வீதி, தோணிக்கல், வவுனியா