மரண அறிவித்தல்,திருமதி கதிரவேலு செட்டியார் நாகம்மா (சத்திரந்தை,களபூமி ,காரைநகர்) (மாடசாமி கோவில் வீதி, பண்டாரிக்குளம், வவுனியா)

                         மரண அறிவித்தல்

nagammah

                      திருமதி கதிரவேலு செட்டியார் நாகம்மா

அன்னையின் மடியில் 1930-03-17             ஆண்டவன் அடியில்: 2016-08-10

காரைநகர் களபூமி சத்திரந்தையை பிறப்பிடமாகவும், இல 29/6 மாடசாமி கோவில் வீதி, பண்டாரிக்குளம், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கதிரவேலு செட்டியார் நாகம்மா அவர்கள் ஆகஸ்ட் மாதம் 10ந் திகதி, புதன்கிழமை இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற ஆறுமுகம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், அமரர் கதிரவேலு செட்டியார் அவர்களின் அன்பு மனைவியும், கிருபானந்தன் (டென்மார்க்), அருணகிரிநாதன் (அம்பாள் களஞ்சியம், கொக்குவில்), பரமானந்தம் (தாரணி ஸ்ரோர்ஸ், பண்டாரிக்குளம், வவுனியா), விக்கினேஸ்வரன் (தோணிக்கல், வவுனியா), நித்தியானந்தன் (வவுனியா), அருளானந்தன் (பாட்ஷா, கோப்பாய்), சரஸ்வதிதேவி (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும், 

மகேஸ்வரி (டென்மார்க்), சிவயோகேஸ்வரி, இந்திராணி, மலர்விழி, வசந்தேஸ்வரி, ஜெயமாலா, காலஞ்சென்ற வன்னியசிங்கம் (பிரான்ஸ்) ஆகியோரின் மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான கந்தசாமி, செல்வநாயகம், மற்றும் கனகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும், ஞானேஸ்வரி, பாலசுப்பிரமணியம், அன்னலட்சுமி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 11ம் திகதி வியாழக்கிழமை (11.08.2016) பிற்பகல் 2 மணியளவில் அவரது இல்லத்தில் இடம்பெற்று, பின்னர் தகனக்கிரியை தட்சணாங்குளம் இந்து மயானத்தில் நடைபெறும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏறறுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தகவல்:
க. பரமானந்தன்
94-77-5588143