மரண அறிவித்தல்
திருமதி. மதங்கசூடாமணி சுப்பிரமணியம்
(தபாற்கந்தோரடி,பயிரிக்கூடல்,காரைநகர்)
தோற்றம்: 23.08.1939 மறைவு: 25.05.2016
காரைநகர் களபூமியைப் பிறப்பிடமாகவும், காரைநகர் பயிரிக்கூடல் தபாற்கந்தோரடியை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. மதங்கசூடாமணி சுப்பிரமணியம் அவர்கள் 25.05.2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சுந்தரம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற கார்த்திகேசு சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 27.05.2016 வெள்ளிக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் பின்னர் சாம்பலோடை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
வசந்தகுமார் (மகன், இலங்கை) +94113158339
வனஜா தர்மரட்ணம் (மகள்,கனடா) +1 647 537 7913