வாழ்த்துச் செய்தி
தலைவர்/செயலாளர்
சுவிஸ்காரை அபிவிருத்திச் சபை
அன்புடையீர்!
கடந்த பன்னிருண்டு வருடங்களாக சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை ஆற்றிவரும் பணிகள் பராட்டுக் குரியவை. புலம்பெயர் நாட்டில் வாழும் காரை மக்களின் தமிழ், கலை, கலச்சாரத்தை வளர்ப்பதற்கு ஆண்டுதோறும் நடைத்திவரும் "காரைத் தென்றல்" நிகழ்வுகள் இளைஞர்களிடையே கலை கலாச்சார விழிமியங்களை வளர்க்கவல்லன.
அதே வேளை பெற்றதாயையும் பிறந்த பொன்னாட்டையும மறவாது காரை மக்ககளின் நல்வாழ்வுக்கு பல்வேறு பணிகள் ஆற்றி வருவது பாராட்டத்தக்கது. காரைநகர் வைத்தியசாலையை விரிவுபடுத்த நிதியுதவி நலகியதை காரைமக்கள் என்றும மறக்க மாட்டார்கள்.
மேலும் உங்கள் சபையால் நடத்தப்பட்ட பேச்சுப்போட்டி. கட்டுரைப்போட்டிகள் மாணவர்களிடையெ விழிப்பணர்வை எற்படத்தியுள்ளது. .காரை புலம்பெயர் மக்கள் ஊரை மறவாத உறவுகள் என சிந்திக்கவைத்தன.
சில ஆண்டுகளுக்கு முன்பு நான் அமரர் தியாகராசா மகேஸ்வரன் "வாழ்வும் அரசியலும" என்னும் நூலை காரைத் தென்றல் விழாவில் வெளியீடு செய்து சிறப்பித்தையும் இச்சந்தர்ப்பத்தில் நினைவு கூர விரும்புகிறேன். இவ்வாண்டு விழாவுக்கு என்னைச் சிறப்பு விருந்தினராக உள்ளன்போடு அழைத்த அழழைப்பை மனப் பூர்வமாக ஏற்றிருந்தேன். பங்கு கொள்வதில் பெருமிதம் அடைந்தேன். ஏதிர்பராராவிதமாக எனது உடல் நிலை காரணமாக பங்குகொள்ள முடியாமையிட்டு வருந்துகின்றேன். எமது காரைநகர் உறவுகளைப்பார்க்க முடியவில்லை,:கலந்துரையாட முடியவில்லை.
காரைத் தென்றல் விழா சிறப்பாக நடந்தேற எனது இதயம் கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றேன்.
அன்புடன், ஐ.தி.சம்பந்தன் 13-05-2016