யாழில் நடைபெற்ற மூதறிஞர் வைத்தீசுவரக் குருக்கள் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுதினம்
சைவத்திற்கும் தமிழுக்கும் தொண்டாற்றி காரைநகருக்கு பெரும்புகழ் சேர்த்த அமரர்.சிவத்தமிழ் வித்தகர் பண்டிதமணி கலாநிதி. சிவத்திரு க.வைத்தீசுவரக் குருக்கள் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (24.04.2016) அன்று யாழ்ப்பாணம், நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணிமண்டபத்தில் காரைநகர் மணிவாசகர் சபை தலைவர் பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் குருக்கள் ஐயாவை நினைவுகூரும் நினைவுச் சொற்பொழிவுகளும் திருவாசக இன்னிசையும் 'ஆலய வழிபாடு' என்னும் நூல் வெளியீடும் இடம்பெற்றது.
நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்கள் சிலவற்றைக் கீழே காணலாம்.