கனடாவில் மூதறிஞர் வைத்தீசுவரக் குருக்கள் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு வழிபாடு
சைவத்திற்கும் தமிழுக்கும் பெருந்தொண்டாற்றியவரும் காரைநகருக்கு பெரும் புகழ் சேர்த்தவருமாகிய மூதறிஞர் தத்துவக் கலாநிதி சிவத்திரு.க.வைத்தீசுவரக் குருக்கள் அவர்களின் முதலாம் ஆண்டு திருவடிக் கலப்பு நினைவு வழிபாடு கனடா சைவ சித்தாந்த மன்றத்தின் ஏற்பாட்டில் 24.04.2016 ஞாயிறு காலை 9:00 மணிக்கு திருவாசக முற்றோதலும் 13.05.2016 வெள்ளி மாலை 6:00 மணிக்கு வைத்தீசுவரக் குருக்கள் நினைவுப் பதிப்பு வெளியீடும் நினைவு விழாவும் மிசிசாகா யாழ் கூட்டுறவு இல்ல மண்டபத்தில் நடைபெற உள்ளது.
சைவத் தமிழ் அன்பர்கள் கலந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
விபரமான அறிவித்தலைக் கீழே காணலாம்.