பூமிப்பந்தில் பரந்து வாழும்
காரைநகர் மக்களுக்கு ஓர் வேண்டு கோள்!
கடந்த காலங்களில் காரைநகரின் பல அபிவிருத்தி மற்றும் தனிநபர் வாழ்வாதார குறைபாடுகளுக்கு பல வழிகளிலும் தனிநபர் மூலமோ,சபைகள்,பழைய மாணவர் அமைப்புக்கள் மூலமோ போதியளவு உதவிகள்,பணிகள் சேவைகள் செய்யப்பட்டிருக்கின்றன, செய்யப்பட்டன.
ஆனால் இனிவரும் காலங்களில் காரைநகருக்கான எவ்விதமான உதவியாயினும், சேவையாயினும், பணிகளாயினும், காரைநகர் அபிவிருத்திச் சபைக் கூடாக நிறைவேற்றுவது மிகச் சிறந்ததும் ஒழுங்கு அமைக்கப்பட்ட வேலைத் திட்டமாகும். அதனால் தனிநபர் நிதி சேகரிப்பு பாரிய குழப்ப நிலையை சந்தேக நிலையை உருவாக்கும் என்பதால் "சபை" சார்ந்து செயல்படுதல் ஒர் குடும்ப ஒழுக்கமாகும். மேலும் காரைநகரிலுள்ள பாடசாலைகள், பொதுப்பணி அமைப்புக்கள் அனைவருக்கும் இவ்அறிவித்தல் பொருத்தமாகும் என்பதை கவனத்தில் எடுத்துக் கொள்ளவும்.
இனிவரும் காலாமாவது நாம் ஒருங்கிணைக்கப்பட்ட ஒழுக்கத்துக்குள் இணைந்து கொள்வது எமது காலத்தின் கட்டாயமாகும். பல தேசங்களில் பரவி பரந்து வாழும் காரைநகர் மக்கள் தங்கள் அனுபவ வாழ்வை படிக்கல்லாகக் கொண்டு இவ் செயல்பாட்டினை முன்னெடுத்தால் ஒரு வேலை எமது நிதி மற்றும் இதரபணிகள் சிந்தாமல் சிதறாமல் ஒருங்கிணைந்து மிகச் சிறந்த சிகரத்ததை எட்டமுடியும் என்பதை அறிவீர்கள்.
நன்றி
"நன்றே செய்வோம். அதை இன்றே செய்வோம்"
இங்ஙனம்.
சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை
செயற்குழு உறுப்பினர்கள்
சுவிஸ் வாழ் காரை மக்கள்
27.02.2016