இந்துக் கல்லூரி, யாழ்ற்றன் கல்லூரி ஆகியனவற்றில் அதிபராகப் பணியாற்றிய திரு.S.பத்மநாதன் அவர்கள் காலமானார்

இந்துக் கல்லூரி, யாழ்ற்றன் கல்லூரி ஆகியனவற்றில் அதிபராகப் பணியாற்றிய திரு.S.பத்மநாதன் அவர்கள் காலமானார்

S.Pathmanathan

காரைநகரின் இரு கண்களெனத் திகழும் பாடசாலைகளான இந்துக் கல்லூரி, யாழ்ற்றன் கல்லூரி ஆகிய இரு கல்லூரிகளிலும் அதிபராக பணியாற்றிய திரு.S.பத்மநாதன் அவர்கள் யாழ்ப்பாணத்தில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம். 

காரைநகர் இந்துக் கல்லூரியில் 03.03.1981 தொடக்கம் உயிரியல் ஆசிரியராகவும் பின்னர் 1981-1983 மற்றும் 1985-1987 காலப்பகுதியில் அதிபராகவும் 1987-1989 காலப்பகுதியில் காரைநகர் யாழ்ற்றன் கல்லூரியில் அதிபராகவும் திரு.S.பத்மநாதன் அவர்கள் சேவையாற்றியிருந்தார்.

கண்டிப்பும் கருணையும் நிறைந்த நல்லாசிரியராகவும் நல்லதிபராகவும் எமது ஊரில் கல்விப்பணியாற்றிய திரு.S.பத்மநாதன் அவர்கள் இந்திய இராணுவம் எமது பிரதேசங்களில் நிலைகொண்டிருந்த இக்கட்டான காலகட்டத்தில் பல இன்னல்களுக்கு மத்தியில் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் தளர்வில்லாமல் பாடசாலையை நிர்வகித்து வந்தவர் ஆவார். 

அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று திங்கட்கிழமை(25.01.2016) அன்று யாழ்ப்பாணம் கொட்டடியில் நடைபெற்றது. 

அன்னாரை இழந்து தவிக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கு ஆறுதலைத் தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போமாக!