அமரர் சபாபதி சபாரத்தினத்துக்கு காரைநகரில் அஞ்சலி

அமரர் சபாபதி சபாரத்தினத்துக்கு காரைநகரில் அஞ்சலி

காரைநகர் புதுறோட்டை பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்டு இறைபதம் அடைந்த அமரர் டாக்டர் சபாபதி சபாரத்தினம் அவர்களுக்கு அஞ்சலி நிகழ்வு இன்று 26.03.2013 கலாநிதி ஆ.தியாகராசா மத்தியமகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. காரைநகர் அபிவிருத்திச்சபைத் தலைவர் திரு.சிவாமகேசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வடமாகாண கல்வியமைச்சின் பிரதிச்செயலாளர் பி.விக்னேஸ்வரன் பாடசாலை அதிபர்கள் மற்றும் மாணவர்கள் லண்டன் காரைநலன்புரிச்சங்கத்தலைவர் ப.தவராஜா காரை அபிவிருத்திச்சபையின் முன்னாள் தலைவர் க.சோமசேகரம் உட்பட பலரும் அஞ்சலி உரை நிகழ்த்தினர்.