காரைநகர் இந்துக்கல்லூரி எனப் பெயர் மாற்றம் பெற்றுள்ள காரைநகர் கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய பெயர் பலகைத் திரைநீக்க விழா 04.01.2016 திங்கட்கிழமை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
கல்லூரி அதிபர் திருமதி வாசுகி தவபாலன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட வடமாகாணக் கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன்
அவர்கள் காரைநகர் இந்துக்கல்லூரிப் பெயர்ப்பலகையைத் திரைநீக்கம் செய்துவைத்தார்.
இந் நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக வடமாகாணக் கல்விப் பணிப்பணிப்பாளர் எஸ்.உதயகுமார், தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் சு.சுந்தரசிவம் ஆகியோரும் கௌரவ விருந்தினர்களாக ஓய்வு நிலை வடமாகாணக் கல்வி அமைச்சின் பிரதிச் செயலரும்
காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவருமான ப.விக்னேஸ்வரன், காரைநகர் கோட்டப் பணிப்பாளர் பு.ஸ்ரீவிக்னேஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.