காரைநகர் தந்த இளம் இசைக் கலைஞருடன் இன்னும் பல இளம் இசைக் கலைஞர்கள் இணைந்து வழங்கும் புத்தாண்டை வரவேற்கும் மாபெரும் இசைத்திருவிழா

காரைநகர் தந்த இளம் இசைக் கலைஞருடன் இன்னும் பல இளம் இசைக் கலைஞர்கள் இணைந்து வழங்கும் புத்தாண்டை வரவேற்கும் மாபெரும் இசைத்திருவிழா

 

இடம்:   பிறம்ரன் கற்பக விநாயகர் கோயில் மண்டபம்
காலம்: வியாழக்கிழமை டிசம்பர் 31, 2015 இரவு 10:00 மணி

கனடாவில் பிறந்து வளர்ந்து இசைக்கல்வி பயின்ற மூன்று மாணவிகளால் ஆரம்பிக்கப்பட்ட 'நட்சத்திரா இசைக்குழு' வரும் வியாழக்கிழமை (31.12.2015) அன்று இரவு 10:00மணிக்கு பிறம்ரன் கற்பக விநாயகர் கோவில் மண்டபத்தில் புத்தாண்டை வரவேற்கும் இன்னிசை நிகழ்ச்சியை வழங்கவிருக்கின்றது.
நட்சத்திரா இசைக் குழுவில் செல்வி.பிருந்தா ஜெயானந்தன், செல்வி. ஜனுஜா சிவானந்தன், செல்வி. சுரேக்கா ஆனந்தராஜா ஆகியோர் இணைந்து
 Keyborad இசை வழங்கவிருக்கின்றனர்.
செல்வி.பிருந்தா ஜெயானந்தன் காரைநகர் ஆயிலியைச் சேர்ந்த அமரர்.விசுவலிங்கம் ஆசிரியரின் பேர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் நட்சத்திரா இசைக்குழு கடந்த இரண்டு காரை வசந்தம் விழாக்களிலும் இன்னிசை நிகழ்ச்சிகளை வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மேற்படி புத்தாண்டை வரவேற்கும் மாபெரும் இன்னிசை நிகழ்ச்சியில் 15 இற்கு மேற்பட்ட பாடகர்களுடன் இணைந்து இசைஅமுதம் வழங்க இருக்கின்றார்கள்.


தொடர்புகளுக்கு:
(905) 458-9701

நிகழ்ச்சி பற்றிய முழுமையான அறிவித்தலைக் கீழே காணலாம்.

star