சைவமும் தமிழும் தளைத்தோங்க இறுதி மூச்சு வரை தொண்டாற்றி காரைநகருக்கு பெரும் புகழ் சேர்த்த மூதறிஞர் வைத்தீசுவரக்குருக்கள் அவர்களின் நூற்றாண்டு மலர் வெளியீட்டு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை (27.12.2015) வியாவில் ஐயனார் கோயில் மண்டபத்தில் நடைபெற்றது.
ஓய்வுநிலை வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு.ப.விக்கினேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு வடமாகாண சபை முதல்வர் திரு.சி.வி.கே.சிவஞானம் அவர்கள் கலந்து கொணடு சிறப்பித்ததுடன்
மலர் வெளியீட்டுரையை யாழ் பல்கலைக்கழக வணிகபீட முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் க.தேவராஜா நிகழ்த்தினார். மலர் ஆசிரியர் திரு.பா.துவாரகன் அவர்கள் நூலை வெளியீட்டு வைத்தார் .