நத்தார் தரும் சிந்தனை

      goodfriday

                   

 

     நத்தார் தரும் சிந்தனை

 

எமக்காகச் சிலுவைகளைச் சுமந்த இயேசுபிரான்களே!
எங்கே நீங்கள் என்று தேடும் காலம் இது
ஏனெனில் நாம் உங்களைப் புதைத்துவிட்டோம்
உங்களின் புனித உடல்களைப் புதைக்கும்போது….

 

உங்களின் நாமங்களை எம் நா 
உச்சரிக்கவே கூச்சப்படுகின்றது
ஏனெனில் எம் நாமங்களை மட்டுமே 
அறிந்த அறிவிலிகள் நாம் என்பதனால்

 

யேசுவே இன்னொரு முறை நீ பிறந்திடு
ஏனெனில் எம்குழந்தைகள் அநாதைகள்
நல்லாசான்கள் அற்ற அநாதைகள்
நல்ல தலைவர்கள் அற்ற அநாதைகள்!

                           –    காரையூர் பித்தன் –