வைத்தீசுவரக்குருக்கள் நூற்றாண்டு மலர் வெளியீட்டு விழா

வைத்தீசுவரக்குருக்கள் நூற்றாண்டு மலர் வெளியீட்டு விழா 

மூதறிஞர் வைத்தீசுவரக்குருக்கள் நூற்றாண்டு மலர் வெளியீட்டு விழா
சைவமும் தமிழும் தளைத்தோங்க இறுதி மூச்சு வரை தொண்டாற்றி காரைநகருக்கு பெரும் புகழ் சேர்த்த மூதறிஞர் வைத்தீசுவரக்குருக்கள் அவர்களின் நூற்றாண்டு மலர் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை (27.12.2015) அன்று பிற்பகல் 2:00 மணிக்கு வியாவில் ஐயனார் கோயில் மண்டபத்தில் நடைபெற உள்ளது. 
ஓய்வுநிலை வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு.ப.விக்கினேஸ்வரன் தலைமையில் நடைபெறும் இவ்விழாவிற்கு வடமாகாண சபை முதல்வர் திரு.சி.வி.கே.சிவஞானம் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ள உள்ளார். 
மலர் வெளியீட்டுரையை யாழ் பல்கலைக்கழக வணிகபீட முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் க.தேவராஜா நிகழ்த்த உள்ளார். மலர் ஆசிரியர் திரு.பா.துவாரகன் அவர்கள் நூலை வெளியீடு செய்து வைக்க உள்ளார். 
அனைவரையும் அன்புரிமையுடன் அழைக்கின்றனர் விழா ஏற்பாட்டாளர்கள். 
முழுமையான விழா அழைப்பிதழையும் நிகழ்ச்சி நிரலையும் கீழே காணலாம்.  

 

27.12.2015 அன்று பி.ப. 2.00 மணிக்கு வியாவில் ஐயனார் தேவஸ்தானத்தில் நடைபெற உள்ளது. 

அனைவரையும் அன்புரிமையுடன் அழைக்கின்றனர் விழா ஏற்பாட்டாளர்கள் 

 

InviteInvite