கடந்த சில ஆண்டுகளாக இருந்து வந்த பெயர் மாற்றம் தொடர்பான
விவாதங்கள் மற்றும் தீர்மானங்களின் அடிப்படையிலும், 08.12.2015 அன்று
மாகாண கல்வி ஆலோசனைக் குழுவினரால் நடாத்தப்பட்ட கூட்டத்திற்கு
அமையவும், 19.11.2015 அன்று நடைபெற்ற பாடசாலை அபிவிருத்தி
சங்க கூட்டத்தில் எடுக்கப்பட்ட ஏனமனதான முடிவிற்கமையவும், மாகாண
கல்விப் பணிப்பாளரின் சிபார்சுக்கு அமையவும் தீவக வலயத்திற்குட்பட்ட
கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் பெயரினை
மீண்டும் 'காரைநகர் இந்துக் கல்லூரி' என்று 01.01.2016 முதல் பெயர்
மாற்றம் பெறுவதற்கான அனுமதியை வடமாகாண கல்வி பண்பாட்டு
மற்றும் விளையாட்டுதுறை அமைச்சின் செயலாளரினால் வழங்கப்பட்டு
எழுத்து மூலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.