முன்னாள் பிரதேசசபை உறுப்பினரும், திரு.சுப்ரமணியம் கதிா்காமநாதனின் இணைப்பாளருமான கணேசபிள்ளை பாலச்சந்திரன் இது பற்றி கூறுகையில் முதற்கட்டமாக இன்று 8.11.2015 முதல் முதியவா்களுக்கான உலா் உணவு வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இவ்வுதவி ஒவ்வொரு மாதமும் 2ம் திகதி நடைபெறுமெனவும் பயனாளிகள் தொிவு இப்போதைக்கு சகல கிராமசேவையாளா் பிாிவுகளிலிருந்தும் அநாதரவான நிலையிலும்,தொழில் செய்ய முடியாத நிலையிலும்,பிள்ளைகளின் கவனிப்பு அற்ற நிலையிலும் இருக்கும் முதியவா்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இருக்கும் எனவும் முதற்கட்டமாக 23 பயனாளிகளுக்கு ரூபா இரண்டாயிரம் பெறுமதியான உலா் உணவுப்பொருட்களும் , தீபாவளியை முன்னிட்டு உடு புடவைகளும் இன்று வழங்கப்பட்டதாகவும் தொிவித்தாா்.
மேலும் அவா் குறிப்பிடுகையில் எதிா் வரும் 2.12.2015ம் திகதி முதல் இவ்வுதவித்திட்டம் 50 பயனாளிகளுக்கு விஸ்தாிக்கப்படும் எனவும் தகுதியுடையோா் விண்ணப்பிக்கமுடியுமெனவும் கூறினாா் .இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டவுடனேயே இது சம்மந்தமாக காரை மக்களும் பயனாளிகளும் திரு.சுப்ரமணியம் கதிா்காமநாதனின் தா்மப் பணியினைப் பாராட்டினா் என்பது குறிப்பிடத்தக்கது.