மரண அறிவித்தல்
போதனை அதிகாரி, தேசிய தொழில்பயிற்சி அதிகாரசபை, ராஜகிரிய
(கருங்காலி, காரைநகர், கொழும்பு)
காரைநகர் கருங்காலியைச் சேர்ந்தவரும் தற்போது 174 Messenger Street, Colombo – 12 இல் வசித்தவருமான துரைச்சாமி சுப்பிரமணியம் அவர்கள் 04.11.2015 புதன்கிழமை சிவபதம் எய்தினார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான துரைச்சாமி, இராசலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காரைநகர் புதுறோட்டைச் சேர்ந்த காலஞ்சென்ற சண்முகம் புனிதவதி தம்பதிகளின் அன்பு மருமகனும், சிவானியின் அன்புக் கணவரும், பிரதீபன் (Under Graduate, மொறட்டுவ பல்கலைக்கழகம்) சுபாசன் (க.பொ.த உயர்தர கணிதப்பிரிவு மாணவன், பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி) ஆகியோரின் அன்புத் தந்தையும் காலஞ்சென்ற தேவநாயகி, புவனேஸ்வரி(ஆசிரியை, வவுனியா சைவப்பிரகாச வித்தியாலயம்), கணேசன் (மேலதிக பணிப்பாளர் நாயகம், வீதி அபிவிருத்தி அதிகாரசபை), சிவசோதி(ஆசிரியர், பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி) சிவபாதம்(அவுஸ்ரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற கந்தையா, காலஞ்சென்ற சிவராசா ஜெயலட்சுமி, பிரபாவதி(பொறியியலாளர் தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்புச் சபை) சிவமலர் (அவுஸ்ரேலியா) மற்றும் சிவபாலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் 05.11.2015 வியாழக்கிழமை மாலை 4:00 மணிக்கு பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் நடைபெற்று தகனக்கிரியைகள் பொரளை கனத்தை இந்து பொது மயானத்தில் நடைபெற்றது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
து.சிவசோதி – சகோதரன்
தொலைபேசி இல. 0718559545 ,0777735709
1 comments
Heart felt condolence.
Thambirajah Thavendran