காரைநகர் அபிவிருத்திச் சபையினால் 20.10.2015 செவ்வாய்க்கிழமை மூன்று விழாக்கள் நடாத்தப்பட்டன. மாணவர் நூலக மூன்றாம் ஆண்டு நிறைவு விழா, கனடா காரை கலாசார மன்றத்தினால் நடத்தப்படும் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர் கௌரவிப்பு விழா,வாணி விழா.
மாணவர் நூலக கட்டடத்தில் காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவர் ப.விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இவ் விழாக்களில் பிரதம விருந்தினராக யாழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும் சிரேஷ்ட பேராசிரியரும் சமூகவியல் துறைத் தலைவருமான கலாநிதி நா.சண்முகலிங்கன் அவர்களும் சிறப்பு விருந்தினராக யாழ் பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் வே.தர்மரத்தினம் அவர்களுடன் ஆங்கிலத்துறை விரிவுரையாளர் கலாநி;தி வீரமங்கை யோகரத்தினம்,அமரர் கலாநிதி தியாகராசாவின் புதல்வி புனிதவதி செல்வரத்தினம்,காரைநகர் பாடசாலை அதிபர்கள் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தனர்.
இவ்வாண்டு நடைபெற்ற புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த காரைநகர் பாடசாலை மாணவரகள் 11 பேரும் யாழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும் சிரேஷ்ட பேராசிரியருமான கலாநிதி நா.சண்முகலிங்கன் அவர்களினால் கனடா காரை கலாசார மன்றத்தின் சார்பில் பரிசில் வழங்கிக் கௌரவிக்கப்பட்டதுடன் பாடசாலை,முன்பள்ளி மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
மூன்றாம் ஆண்டு நிறைவுச் சிறப்புரையினை நூலக ஸதாபகர் DR சு.நடராசா நிகழ்த்தினார் ஆசியுரையினை சிவஸ்ரீ. கு.சண்முகராஜக்குருக்களும் வரவேற்புரையினை பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளையும் நன்றியுரையினை காரைநகர் அபிவிருத்திச் சபை பொருளாளரும் காரைநகர் பிரதேச சபை முன்னாள் உறுப்பினருமான க.பாலச்சந்திரனும் நிகழ்த்தினர். யாழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும் சிரேஷ்ட பேராசிரியருமான கலாநிதி நா.சண்முகலிங்கன் அவர்கள் தான் எழுதி வெளியீடு செய்த ஒரு தொகுதிப் புத்தகங்களை நூலகத்திற்கு அன்பளிப்பாக வழங்கினார்.