காரைத் தென்றல் -2015இல் தவில் நாதஸ்வரக் கலைஞர்களை சுவிஸ் குடும்பம் கௌரவித்தது.
புலம்பெயர் வாழ்வியலில் கனடாக்குடும்பம், லண்டன்குடும்பம், பிரான்ஸ்குடும்பம், சுவிஸ்குடும்பம் என எமது கிராமத்து உறவுகள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களைத்தேடி தவில் நாதஸ்வரக்கலைஞர்கள் வருகைதந்துள்ளார்கள்.
சுவிஸ் வாழ் காரை குடும்ப அங்கத்தவர்களின் உன்னதமான பேராதரவுடன்1 ஆவணி திங்கள் 13.09.2015இல் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 13.00 அளவில் நடைபெற்ற காரைத்தென்றல்- 2015 நிகழ்வில் தவில் நாதஸ்வரக் கலைஞர்களை சுவிஸ் குடும்பம் கௌரவித்தது.
காரையம்பதி மூத்த நாதேஸ்வரக்கலைஞர் கைலாயகம்பர் அவர்களின் பேரன் தவில் வித்துவான் வீராச்சாமி அரிகரபுத்திரன் (கரன்) குழுவினரின் "இசைக் கச்சேரி" இசையால் வசமாகஇதயம் ஏது என்ற கூற்றிற்கிணங்க ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டது. மிகவும் அற்புதமாக தவில், நாதஸ்வரக் கலைஞர்கள் இசை வழங்கியிருந்தார்கள். அதனைத்தொடர்ந்து கலைஞர்கள் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது. இந் நிகழ்விற SKT நாதன் கடை உரிமையாளர் திரு. சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவர்களின் அணுசரனை வழங்கியிருந்தார்கள்.
சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினர் தவில், நாதஸ்வரக் கலைஞர்களை விருது வழங்கி கௌரவித்தனர். இவ் விழாவின் பிரதமவிருந்தினர் கலாநிதி கென்னடி விஜயரத்தினம் அவர்கள் விருது வழங்கி வாழ்த்து இசைக்க நாதஸ்வர வித்துவான் திருமலை முத்துலிங்கம் யோகேஸ்வரன் அவர்களுக்கு "ஸ்வரஞான வேந்தன்" விருதும், தவில் வித்துவான உடுப்பிட்டி பத்மநாதன் செந்தூரன் அவர்களுக்கு "சிவநாத லயவாரதி" விருதும் நாதஸ்வர வித்துவான் சுதுமலை நாகராசா மதுசூதனன் அவர்களுக்கு "சுவிஸ் நாதச் சாரல்" விருதும் காரையம்பதி மூத்த நாதஸ்வரக்கலைஞர் கைலாயகம்பர் அவர்களின் பேரன் தவில் வித்துவான் கோவில்குளம் வீராச்சாமி அரிகரபுத்திரன் (கரன்) அவர்களுக்கு "லயகேசரி" விருதும் வழங்கி சிவஸ்ரீ. த. சரஹணபவானந்தகுருக்கள், திரு.சிவனேயன் கோபி, கலாநிதி கென்னடி விஜயரத்தினம் SKT நாதன் கடை உரிமையாளர் திரு சுப்பிரமணியம் கதிர்காமநாதன் ஆகியோர் பொன்னாடைபோத்தி சந்தனமாலை அணிவித்து வாழ்த்துப்பாக்களை வழங்கி கௌரவித்திருந்தனர்.
நிகழ்வின் நிழற்படங்களையும் வாழ்த்துமடல்களையும் கிழேகாணலாம்.
நன்றி
இங்ஙனம்,
சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை
செயற்குழு உறுப்பினர்கள்,
சுவிஸ் வாழ் காரை மக்கள்.
20. 09. 2015