அன்புநெறி ஜுலை மாத இதழ்

Saiva_Manram_Logo

கனடா சைவ சித்தாந்த மன்றம் அதன் தலைவர் சிவநெறிச் செல்வர் திரு.தில்லையம்பலம் விசுவலிங்கம் அவர்களை நிர்வாக ஆசிரியராகவும், திருமதி.வடிவழகாம்பாள் விசுவலிங்கம் அவர்களை ஆசிரியராகவும் கொண்டு அன்புநெறி என்னும் மாதாந்த சஞ்சிகையை கடந்த 19 ஆண்டு காலமாக கனடாவில் வெளியிட்டு வருகின்றது. 


அன்புநெறி சைவத் தமிழ் அறிஞர்களின் ஆன்மீகக் கட்டுரைகளையும், சைவத்தமிழ் இலக்கியங்களையும் கனடா சைவ சித்தாந்த மன்றம் தொடர்பான தகவல்களையும் உள்ளடக்கியதாக வெளிவருகின்றது. 


இன்றைய காலத்தில் இளைஞர் முதல் முதியவர் வரை அனைவரும் படித்துப் பயன்பெற வேண்டிய அரிய ஆன்மீக சஞ்சிகையான அன்புநெறியின் ஜூலை மாத இதழினை (மலர் 19, இதழ்-12) இங்கே வாசகர்களுக்காக எடுத்து வருகின்றோம். 


இவ்விணைப்பில் அழுத்தி அன்புநெறி ஜுலை மாத இதழை வாசிக்கலாம்.

அன்புநெறி ஜுலை மாத இதழ்