உ
சிவமயம்
"தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி"
சைவசித்தாந்த மன்றம் கனடா
தலைவர்: சிவநெறிச்செல்வர் திரு.தி.விசுவலிங்கம்
அன்புடையீர் வணக்கம்
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வானொடு முன் தோன்றிய மூத்தகுடி தமிழ்க்குடியாகும். அப்பெருங்குடியினர் பண்பாட்டுடன் சமயச் செந்நெறியிலும் சிறந்து விளங்கினர். இவர்கள் மேற்கொண்ட சமயநெறி சிவநெறியாகும்.
ஈழமணித்திருநாட்டின் யாழ்ப்பாணத்தின் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாலவர் பின்பற்றிய வழியில் கிராமங்கள் தோறும் கால்நடையாக சென்றும்இ அரிக்கன் லாம்புடன் மாட்டுவணடியிலும் சென்று அர்ததமுள்ள வைசவசித்தாந்த கருத்துக்களையும், சமயச்சொற்பொழிவுகளையும் பரப்புரை செய்து அதில் வெற்றியும் கண்டவர் காரைநகரைச் சேர்ந்த அருணாசல உபாத்தியார் என்ற மகான் என்பதில் பெருமிதம் கொள்கின்றோம்.
வைசமும் தமிழும் கண்ணெனக் கொண்டு அருளியல், வாழ்வியல் வழிபாடுகள் சிறக்கவும், எமது கிராமத்திலும், யாழ்ப்பாணத்திலும் பல பாடசாலைகள் உருவாகுவதற்கும் தனது செல்வங்கள் அனைத்தையும் பயன்படுத்தி அயராது தொண்டாற்றிய பெரிய மகான் என்பதில் பூரிப்படைகின்றோம்.
"அவன் அவள் அதுவெனும் அவைமூ வினைமையின்
தோற்றிய திதியே ஓடுங்கி மலத்தளதாம்
அந்தமாதி என்மனார் புலவர்"
சைவப் பாடசாலைகளை நிறுவவும், சைவ ஆசிரிய கலாசாலையை உருவாக்கவும், சைவ ஆசிரியர்களை தோற்றிவிக்கவும் அயாரது தொண்டாற்றிய பெரிய மகான் திரு.ச. அருணாசலம் உபாத்தியார் அவர்களின் வரலாற்று நூல் மீளவும் வெளிவருவதையிட்டு பெருமகிழ்ச்சயடைகின்றோம்.
சைவசித்தாந்த மன்றம் கனடா எடுத்த முயற்சி பாராட்டுதலுக்குரியதாகும். இவர்கள் இதனோடு நின்றுவிடாது புலம்பெயர் தேசத்து இளம் சமூதாயத்திற்கு தேவையான சைவசமயத்தவரின் உணவுப் பயன்பாடுகள், சமயஅறிவு போன்ற நூல்கள் தொடர்ந்து வெளிவருதல் வேண்டும் என்றும், திரு.ச. அருணாசலம் உபாத்தியார் அவர்களின் வரலாற்று நூல் வெளியீட்டு விழா சிறப்புற அமைய ஈழத்துச் சிதம்பர ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ ஆனந்த தாண்டவ நடராஜனின் சௌபாக்கியங்கள் கிடைத்து இன்புற வாழ்த்துகின்றோம்.
"மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்"
நன்றி
இங்ஙனம்.
சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை
செயற்குழு உறுப்பினர்கள்
சுவிஸ் வாழ் காரை மக்கள்
24.07.2015