மேலும்பணியாற்றி மிக்குயர்ந்து வாழி – கவிஞர் இராசையா குகதாசன் –

Kugathas (1)

சிவத்திரு தி.விசுவலிங்கம்
தலைவர்இ கனடா சைவ சித்தாந்தமன்றம்      
பெருமதிப்புக்குரியீர்!
மேலும்பணியாற்றி மிக்குயர்ந்து வாழி.
             
உலகளாவிய  ரீதியில் சைவநெறி முறைகளைப் பரப்புவதிலும்,
பாதுகாப்பதிலும் பணியாற்றிவரும் கனடா சைவசித்தாந்த மன்றத்தினரதும், அதன் ஸ்தாபகத்தலைவரும்,பதிப்பாசிரியருமான சிவத்திரு தி.விசுவலிங்கம் அவர்களதும்
பெருமுயற்சியால் வெளிவரும்  'சைவ ஆசிரியர்களைத் தோற்றுவித்த திரு ச.அருணாசலம் அவர்கள்'என்ற நூல் வெளியீட்டு விழாவுக்கு வாழ்த்துரை வழங்குவதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகின்றேன்.

திரு ச.அருணாசலம் அவர்களின் சைவத்தமிழ்ப் பணிகளின் வீச்சினால் திருநெல வேலியில் உருவாக்கப்பெற்ற சைவ வித்தியா விருத்திச் சங்கத்தில் ஏறக்குறைய ஒன்பது வருடங்கள் பணிப்பாளர் சபை உறுப்பினராகஇசமயத்திட்டப் பணிப்பாளராகஇ கொடிநாட் குழுத்தலைவராக பணியாற்றியிருக்கின்றேன்.  அக்கால கட்டத்தில்தான் சைவப்பெரியார்சிவத்திரு ச.அருணாசலம் அவர்கள் சைவத்தமிழ் உலகிற்கு ஆற் றியபணிகள் பற்றிவிரிவாக அறிய முடிந்தது. விபரங்களை அறிந்து வியப்படைந்த எனக்கு இத்துணைபணியாற்றிய  ஒருவரை  இந்த சமூகம் கௌரவிக்கவும்இ நினைவு கூரவும் தவறவிட்டுவிட்டது என்ற நியாயமான கோபமும் ஏற்பட்டதுண்டு.

              மேலை நாடுகளில் எல்லாம் தத்தமது மொழிக்கு,சமயத்திற்கு தொண்டுசெய்தவர்கள் பற்றிய தெளிவான சரித்திரச்சான்றுகளை, பணிகளை என்றும் நினைவு கூரத்தக்கதாக, எதிர்காலச் சந்ததிகள் அறியக்கூடியதான வழிவகைகளைச் செய்திருக்கின்றார்கள், அழியாமல் பேணிப் பாதுகாத்தும் வைத்திருப்பார்கள்.  ஆனால் நம்மவர்கள் எவற்றையும்  இலகுவில் மறந்துவிடுவதையிட்டும் வருந்தியதுண்டு.  நம்மவர்களின் அந்தக்குறையை இன்று இச் சைவசித்தாந்த மன்றம் போக்கிய தையிட்டு சைவத்தமிழ் உலகு சார்பாக அவர்தம் பணிக்கு வாழ்த்தைத் தெரிவிப்பதில் பெருமையடைகின்றேன்.

                  மேதகு ச.அருணாசலம் போன்ற தியாகிகளின் எண்ணற்ற செயற்பாடுகளின் விளைவாகவே இன்னும் சைவமுந் தமிழும் இங்கு நீடு வளர்ச்சி பெற்றது என்றால் மிகையாகாது.கிடைத்த சந்தர்ப்பத்தில் எவ்வளவு பணம் சம்பாதிக்கலாம் என்று சிந்திக்காது ஊண் கொடுத்து,  உடை கொடுத்து, கற்க நூல் கொடுத்து, சைவ ஆசிரியர்களையும் பாடசாலைகளையும் உருவாக்க தன் சொத்தையே கொடுத்த ஒரு பெருந்தகை இவர். இவற்றை ஒரு தொண்டாகவே செய்து வந்த
பெருமகன்.

             பலவரலாறுகள் மறைக்கப்பெற்றும் ,  மறக்கப் பெற்றும் வருகின்ற
இன்றைய காலச்சூழலில் இப்பெரியாரின் பணிபற்றிய விரிவானவிபரங்கள் அடங்கிய
நூலை வெளியிட்டுவைக்கும் மன்றத்தினரும், பதிப்பாசிரியரினதும் பணிகள் பெரும் பாராட்டுக்குரியவை மட்டுமன்றி சைவ உலகின் நன்றிக்குமுரியதாகும்.

          காரைநகர்ப் பிறந்தோர் மட்டுமல்ல சைவத்தமிழ் உலகோர் யாபேரும்
பெருமைப்படக்கூடிய இவ்வரலாற்று நூலை வாங்கிப் பேணுவதும் பாதுகாப்பதும் ஒவ்வொரு சைவ சமயியின் கடமையுமாகும். 

           நூல் வெளியீட்டு விழா சிறக்கவும்இமன்றத்தின் பணிகள் செழிக்கவும்
எல்லாம் வல்ல பார்வதி சமேத பரமேஸ்வரன் தாளை மனமொழி மெய்களால்
வழுத்துகின்றேன்.

                                                                                                              அன்புடன்
கொழும்பு. 11                                                                            தெய்வத்தமிழிசைக்கவிஞர்
நாயன்மார்கட்டு                                                                                                                                                                                                                                       இராசையா குகதாசன்.