‘காரைநகரின் கல்வி ஊற்று’ சுப்பிரமணிய வித்தியாசாலை அதிபர் திருமதி.கௌ.அருள்மொழி அவர்களின் வாழ்த்துச் செய்தி

    Gowry

                 காரைநகரின் கல்வி ஊற்று


காரைநகர் மக்களின் கல்விக்கான ஊற்றாக விளங்கியவர் திரு.ச.அருணாசலம் அவர்கள். இவர் அக்காலத்தில் சைவ சமயத்தை நிலைநாட்டுவதற்காக எமது பாடசாலையை உருவாக்குவதில் ஊன்றுகோலாக அமைந்தவர். 


அத்துடன் ஆசிரியத்துவத்திற்கு இலக்கணமாக தம் உடல்இ பொருள், ஆவி அனைத்தையும் தியாகம் செய்து இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் முதல் ஆசிரியராகக் கடமையாற்றியவர் என்ற பெருமைக்குரியவர் ச.அருணாசலம் அவர்கள் தனது சிந்தனைப்படி சைவ ஆசிரியர் கலாசாலையை முதன்முதலாக இப்பாடசாலையுடன் இணைந்து ஆரம்பித்தார் என்ற பெருமைக்கும் உரியவர். 


இப் பெருமகனாரின் நூல் வெளியீட்டில் ஆசியுரை வழங்குவதில் பெருமை கொள்வதுடன் அன்னாரின் பணியை பாடசாலை சமூகம் என்றும் நன்றியுடன் நினைவு கொள்ளும் என்பதில் ஐயமில்லை. 

திருமதி. கௌ.அருள்மொழி
அதிபர்
யா-சுப்பிரமணிய வித்தியாசாலை
காரைநகர்

Greetings Subramaniaya