காரைநகர் மணிவாசகர் சபை நடாத்தும் மணிவாசகர் குருபூசை நிகழ்வும் மணிவாசகர் விழாவும்

காரைநகர் மணிவாசகர் சபை நடாத்தும் மணிவாசகர் குருபூசை நிகழ்வு நாளை மறுதினம் திங்கட்கிழமை ஈழத்துச் சிதம்பரத்தில் இடம்பெற உள்ளது.

ஈழத்துச் சிதம்பர தேவஸ்தானத்தில் காலை 7.00 மணி முதல் திருவாசக முற்றோதலும்,நண்பகல் 11.30 மணிக்கு மணிவாசகப் பெருமானுக்கு விஷேட அபிசேக ஆராதனைகளும் மாலை 3.30 மணிக்கு சபையின் தலைவர் தலைமையில் மணிவாசகர் விழாவும் நடைபெற உள்ளது.

இந்த விழாவில் மணிவாசகர் குருபூசையை ஒட்டி பாடசாலை மாணவர்களுக்கிடையே நடாத்தப்பட்ட போட்டிகளில் முதலிடங்களைப் பெற்ற மாணவர்களின் நிகழ்வுகள் இடம்பெற உள்ளதுடன் சிறப்புச் சொற்பொழிவினை சிம்மயா மிஷன் வதிவிட ஆச்சாரியார் பிரமச்சாரி ஜாக்கிரத சைதன்ய சுவாமிகள் நிகழ்த்த உள்ளார்.மாணவர்களுக்கான பரிசில்களை பேராசிரியர் வே.தர்மரட்ணம் வழங்குவார்