சிவபூமியாகிய காரைநகரில் சைவம் வளர்க்கும் காரைநகர் மணிவாசகர் சபையின் பவளவிழா மலர் வெளியீடு கடந்த திருவெம்பாவை உற்சவ காலத்தில (25.12.2014) அன்று கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தில் (காரைநகர் இந்துக் கல்லூரி) நடராசா ஞாபாகார்த்த மண்டபத்தில் செஞ்சொற் செல்வர் கலாநிதி.ஆறு.திருமுருகன் தலைமையில் நடைபெற்றிருந்தது.
கடந்த எழுபத்தைந்து ஆண்டுகளாக சளையாது சைவப்பணியாற்றி வருகின்ற காரைநகர் மணிவாசகர் சபையின் நிறுவுநர் சிவத்தமிழ் வித்தகர் மூதறிஞர், பண்டிதமணி, கலாநிதி சிவத்திரு.க. வைத்தீசுவரக் குருக்கள் அவர்கள் இந்நிகழ்வில் நேரடியாகச் சமூகமளித்து பவளவிழா மலரினை சம்பிரதாயபூர்வமாக வெளியிட்டு வைத்தமை வரலாற்று முக்கியத்துவம் மிக்க நிகழ்வாகும்.
இந்நிலையில், இந்த பவள விழா மலரின் அறிமுக விழாவுடன் அமரர். கலாநிதி. க.வைத்தீசுவரக் குருக்கள் அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தiனையும் கொழும்பு மாநகரில் நடத்துவதற்கு காரைநகர் மணிவாசகர் சபை ஏற்பாடு செய்தள்ளது.
மேற்படி விழா கொழும்பு விவேகானந்த சபை, நாவலர் சபை ஆகியவற்றின் உப-தலைவர் திரு.க.ஜெகதீசன் அவர்கள் தலைமையில் வரும் ஞாயிற்றுக்கிழமை (14.06.2015) அன்று மாலை 5:00 மணிக்கு உருத்திரா மாவத்தை, கொழும்பு-6 இல் அமைந்தள்ள கொழும்பு தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெற உள்ளது.
இவ்விழாவில் கலந்து கொள்ளுமாறு சைவ அபிமானிகள் அனைவரும் அழைக்கப்படுகின்றார்கள்.
முழுமையான அறிவித்தலைக் கீழே காணலாம்.