காரைநகர் கிழவன்காடு கலாமன்றம் நடாத்தும் கலைவிழாவும் பரிசளிப்பு விழாவும் நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணிக்கு கலாமன்ற மனோன்மனி கலையரங்கில் இடம்பெற உள்ளது.

கலாமன்றத் தலைவர் ந.சோதிநாதன் தலைமையில் நடைபெற உள்ள விழாவில் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகனும் சிறப்பு விருந்தினர்களாக காரைநகர் பிரதேச செயலர் திருமதி தேவந்தினி பாபு,யாழ் பல்கலைக்கழக இசைத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் காரை பரமேஸ்வரி கணேசன் ஆகியோரும் கௌரவ விருந்தினர்களாக வர்த்தகர்களான பே.நாகரத்தினம்,ச.சிவஞானம் க.அருள்நேசன் ஆகியோரும் கலந்துகொள்ள உள்ளனர்.