125வது ஆண்டில் காலடி பதிக்கும் காரைநகர் இந்துக்கல்லூரி

125வது ஆண்டில் காலடி பதிக்கும் காரைநகர் இந்துக்கல்லூரி
முதல்நிகழ்வாக 2013 நாட்காட்டி வெளியீடும் புதிய அதிபர் பதவியேற்பும்

காரைநகர் இந்துக்கல்லூரி இவ்வாண்டான 2013இல் தனது 125வது ஆண்டில் கால்பதிக்கின்றது. இதனையொட்டி 18.01.2013இல் கல்லூரியின் 125வது ஆண்டு விழாவின் ஆரம்ப நிகழ்வாக 2013ஆம் ஆண்டிற்கான நாட்காட்டி வெளியீட்டு விழாவும் கல்லூரியின் புதிய அதிபராக காரைநகர், களபூமி, பாலாவோடையைச் சேர்ந்தரும்  தீவகவலய உதவி கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றியவரும் காரைநகர் இந்துக்கல்லூரியின் பழைய மாணவியுமாவர் திருமதி. வாசுகி தவபாலன் பதவியேற்பும் நடைபெற்றது. இவ்விழாவில் வடமாகாண கல்வி அமைச்சின் பிரதிச் செயலாளர் திரு.ப.விக்னேஸ்வரன், தீவக வலய கல்விப் பணிப்பாளர் திரு.ஜோன் குயின்ரஸ்,

திரு E.S.P. நாகரட்ணம் ஆகியோரும் கலந்து கொண்டனர். புதிய அதிபராக பதவியேற்றிருக்கும் திருமதி. வாசுகி தவபாலன் அவர்களுக்கு கனடா வாழ் காரை மக்களுடன் இணைந்து கனடா காரை கலாச்சார மன்றமும் வாழ்;த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றது.