காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரியின் கால்கோள் விழா 2013
யாழ்ற்ரன் கல்லூரியின் 2013 ஆம் ஆண்டிற்கான முதலாந் தர மாணவர்களை வரவேற்கும் கால்கோள் விழா 18.01.2013 மு.ப 8.30 மணிக்கு கல்லூரியின் ஆரம்பப் பிரிவு மண்டபத்தில் கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பிரதம விருந்தினராக தேசிய சேமிப்பு வங்கியின் காரைநகர் கிளை முகாமையாளர் திரு.ஏ.கெங்காதரன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.