மரண அறிவித்தல், சிவநெறிச் செல்வர் திரு. தில்லையம்பலம் விசுவலிங்கம் (கனடா சைவசித்தாந்த மன்றத்தின் ஸ்தாபகர், தலைவர்) (போஷகர்,காரை இந்து கல்லூரி பழைய மாணவர் சங்கம்,கனடா கிளை) (முன்னாள் ஆசிரியர் – இலங்கை, நைஜீரியா) (வலந்தலை,காரைநகர்) (மிசிசாகா,கனடா)

 

மரண அறிவித்தல்

சிவநெறிச் செல்வர் திரு.தில்லையம்பலம் விசுவலிங்கம்

(கனடா சைவசித்தாந்த மன்றத்தின் ஸ்தாபகர், தலைவர்)

(போஷகர், காரை இந்து கல்லூரி பழைய மாணவர் சங்கம், கனடா கிளை)

(முன்னாள் ஆசிரியர் – இலங்கை, நைஜீரியா)

தோற்றம் : 16-12-1937                                                                           சிவபதம் : 08-10-2023

யாழ்ப்பாணம் காரைநகர் வலந்தலையை பிறப்பிடமாகவும், மிசிசாகா கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திரு. தில்லையம்பலம் விசுவலிங்கம் அவர்கள் அக்டோபர் 8ஆம் திகதி 2023 இல் சிவபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம்-இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

அராலிதெற்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான நாகலிங்கம்-முத்துமாரி தம்பதிகளின் மருமகனும்,

வடிவழகாம்பாளின் அன்புக் கணவரும்,

வாசுகி, விசுவபாரதி, வடிவானந்தன், ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சக்திகணபதி, யசோதா, சந்திரிக்கா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சிவகௌரி, அபிராமி, சரவணன், கவின், நிலான் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான சிவசம்பு, தேவராசா, தர்மலிங்கம், நாகேஸ்வரி, இரத்தினேஸ்வரி மற்றும் இராஜேஸ்வரி ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான பாக்கியம், ஞானாம்பிகை, தவமணிதேவி, மகேசன், திருவாதிரை மற்றும் கணேசமூர்த்தி, சிவராசா, நடராசா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்:
பார்வைக்கு:
Thursday, 12 Oct 2023 5:00PM – 9:00 PM
St. John’s Dixie Cemetery & Crematoriam
737 Dundas St. E., Mississauga, ON L4Y 2B5, Canada

Friday, 13 Oct 2023 9:00AM – 12:00 PM
St. John’s Dixie Cemetery & Crematoriam
737 Dundas St. E., Mississauga, ON L4Y 2B5, Canada

தொடர்புகளுக்கு:
வடிவழகாம்பாள் – மனைவி – 905-566-4822
வாசுகி – மகள்
விசுவபாரதி – மகன்
வடிவானந்தன் – மகன்
இராஜேஸ்வரி – சகோதரி (அவுஸ்திரேலியா)

 

2 comments

    • சிவபாலு on November 2, 2023 at 9:41 am

    ஆழ்ந்த அனுதாபங்கள். இறைதொண்ட வாழ்நாள் தொண்டாக அருப்பணியாற்றிய மதிப்பும் பெருமைககம் உரிய பெரும் மனிதர். நன்நெறியில் மாணாக்கரை வழிநடத்தியவர். பொதுநலத் தொண்டராக நற்பணியாற்றிய ஒரு பெரியாரைத் தமிழ்கூறும் நல்லுகம் இழந்துவிட்டது. துணைநல்லாள் வடிவழகாம்பாளோடு இணைந்து அவர் ஆற்றிய பணிகளை நான் நன்கறிவேன். கற்றாரைக் கற்றாரே காமுறுவர் என்பதற்கேற்ப மதிப்பும் மரியாதையும் செலுத்தி அனைவரையும் அணைத்துக்கொண்டவர். கல்வியியலாளர்களை அழைத்து சமயம் மற்றும் தமிழ் சார்ந்த சொற்பொழிவுகளை மாணவர்களும் பெரியவர்களும் கேட்டுப்ப்பயனடைய வைத்தவர்.

    கணித நூலுக்கு ஆசானாக ஈழத்தில் கல்விப்பணியிலும் தனன்கென ஒரு தனியிடத்தை வகித்துக்கொண்டவர்.
    அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.

    • KANMANIRAJAH Ganesharajah on October 11, 2023 at 8:20 pm

    Please accept our heartfelt condolences Ganesharajah and family Sydney

Comments have been disabled.