மரண அறிவித்தல், திருமதி.காராளசிங்கம் கமலாதேவி (முன்னாள் அதிபர், யா / சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயம் ) (கோவளம்,காரைநகர்) (களபூமி,காரைநகர்) (அராலி தெற்கு)

 

மரண அறிவித்தல்

திருமதி.காராளசிங்கம் கமலாதேவி

(முன்னாள் அதிபர், யா / சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயம் )

காரைநகர் கோவளத்தை பிறப்பிடமாகவும் களபூமி மற்றும் அராலியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.காராளசிங்கம் கமலாதேவி (முன்னாள் அதிபர், யா / சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயம் ) அவர்கள் 03.08.2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற கந்தசாமி விசாலாட்சி தம்பதிகளின் அன்பு புதல்வியும்,

காலஞ்சென்ற கனகசபை சீதேவிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கனகசபை காராளசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும் ,

காண்டீபன் (kandi travels)அவர்களின் அன்புத் தாயாரும்,

சூரியமூர்த்தி, ஈஸ்வரி மற்றும் காலஞ்சென்றவர்களான சந்திரமூர்த்தி, தியாகராஜா மற்றும் விஜலட்சுமி, மஹேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெகதீஸ்வரன், மகேஸ்வரன், சிவனேஸ்வரன்(லண்டன்) மற்றும் காலஞ்சென்ற திருஞானம், உலகேஸ்வரன், யோகேஸ்வரன் மோகனேஸ்வரன், பரமேஸ்வரன் ஆகியோரின் மைத்துனியும்,

கனகலிங்கம், சந்திரமலர் மற்றும் காலஞ்சென்றவர்களான சிவதாசன் மற்றும் ஆறுமுகம், சாந்தகுமாரி ஆகியோரின் மச்சாளுமாவர்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 04. 08.2023 வெள்ளிக்கிழமை அன்று நண்பகல் அராலியில்( அராலி தெற்கு கரப்பிட்டி பிள்ளையார் கோவிலடி)உள்ள இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைக்காக அராலி, பூநாவோடை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:
காண்டீபன் (மகன்)
+94771428700