காரைநகர் பிரதேச வைத்தியசாலை புனரமைப்பு

 

காரைநகர் பிரதேச வைத்தியசாலை புனரமைப்பு

சுவிஸ் காரைஅபிவிருத்திச் சபையினால்  காரைநகர்  பிரதேச   வைத்தியசாலையில் கிழக்கு பக்கமாக  60`x22` பரப்பளவு கொண்ட கட்டிடத்தொகுதி நிர்மாணிக்கப்பட்டு ஈ.சி.ஜி அறை மற்றும் வைத்திய அதிகாரி தங்கும் அறை அமரர் தில்லையம்பலவாணர்  தலைமையில்  கலாநிதி நடராசா ஜெயக்குமாரன்  அவர்களால் 26.06.2006இல் திறந்து வைக்கப்பட்டது.  இக் கட்டிடத்தொகுதியானது தற்பொழுது பிரசவ சிகிச்சை (Clinic)  நிலையமாக பாவிக்கப்பட்டு வருகின்றது.

காரைநகர் பிரதேச வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கத்தினர் இக் கட்டிடத்தொகுதியின் புனரமைப்பு வேலைகள் தொடர்பாக எமது சபையினருக்கு விடுத்த கோரிக்கைக்கிணங்க அவர்களது பணிகள் தொடர எமது சபையால் ஐந்து இலட்சம் (500 000.00) ரூபாய்கள் நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டது.

புனரமைப்பு பணிகளின் நிழற்படத் தொகுப்பு இணைக்கப்பட்டுள்ளது.

நன்றி

“ஆளுயர்வே ஊருயர்வு”

“நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்”

இங்ஙனம்

                சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை

               செயற்குழு உறுப்பினர்கள்

  மொழி,கல்வி, கலை மேம்பாட்டுக்குழு

சுவிஸ் வாழ் காரை மக்கள்

18.03.2023