மரண அறிவித்தல்
திருமதி சாரதாமணி பேரம்பலம்
(பெரியமணல், காரைநகர் – தெகிவளை, கொழும்பு)
தோற்றம்: 16-11-1947 மறைவு: 12-01-2023
மலேசியாவை பிறப்பிடமாகவும் பெரியமணல், காரைநகர் மற்றும் தெகிவளை, கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருமதி சாரதாமணி பேரம்பலம் அவர்கள் கடந்த (12-01-2023) வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான இராசையா-அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும்,
அனலைதீவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சுப்பையா-செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பேரம்பலத்தின் அன்பு மனைவியும்,
வாசுகி (அவுஸ்திரேலியா) வாசீகன் (பிரதேச செயலகம், சங்கானை), காலஞ்சென்ற சிவகௌரி மற்றும் செந்தாமரை (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நந்தா, புஸ்பலீலா (ஆசிரியை, சென்ஜோன்ஸ் கல்லூரி), கவிதாசன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான கலைமகள், இராஜயோகன், மற்றும் சுசிலாதேவி, சறோஜா (அமெரிக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அகிலேஷன், அக்ஷிதா, சுபஹரி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான கனகம்மா, குகானந்தன், பத்மநாதன், ஜெயசோதி மற்றும் துரைராஜா (கனடா), கதிரவேலு ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை (16-01-2023) திங்கட்கிழமை காலை 8.00மணியளவில் வீரபத்திரர் கோயிலடி, பங்களா லேன், மல்லாகம் என்ற முகவரியிலுள்ள அன்னாரது மகனது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக அளவெட்டி, மல்லாகம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்: குடும்பத்தினர்.
077 627 1488
வீரபத்திரர் கோயிலடி,
பங்களா லேன், மல்லாகம்.
1 comments
ஆழ்ந்த அனுதாபங்கள்.
ஓம் சாந்தி.