மரண அறிவித்தல், திரு.பொன்னுத்துரை சுப்பிரமணியம் (நேவிச்சந்தி,பலகாடு,காரைநகர்) (7ம் ஒழுங்கை,வேப்பங்குளம், வவுனியா)

 

மரண அறிவித்தல்

திரு.பொன்னுத்துரை சுப்பிரமணியம்

காரைநகர் பலகாடு நேவிச்சந்தியை பிறப்பிடமாகவும், வவுனியா வேப்பங்குளம் 7ம் ஒழுங்கையை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை சுப்பிரமணியம் அவர்கள் தனது 76வது வயதில், 26/11/2022 சனிக்கிழமை இரவு காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற திரு.திருமதி. பொன்னுத்துரை பாக்கியம் தம்பதிகளின் ஏக புத்திரனும்,

கோவளத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற திரு.திருமதி. நமசிவாயம் அன்னம்மா தம்பதிகளின் மூத்த மருமகனும்,

விமலாதேவியின் அன்புக் கணவரும்,

நாகம்மா, கமலாதேவி, லோகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

அமரர் ஏகாம்பரநாதன், ரதிதேவி, தவமலர், அமரர் சிவராசா, சாந்தி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் வவுனியாவிலுள்ள அவரது இல்லத்தில் 28/11/2022 திங்கட்கிழமை காலை 8 மணியளவில் நடைபெற்று 10 மணியளவில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: மனைவி
+94779825828
+94776015086