மரண அறிவித்தல், திருமதி சிவானந்தராஜா சிவபாக்கியம் (இலந்தச்சாலை,காரைநகர்) (SM கேணியடி,காரைநகர்)

 

 

மரண அறிவித்தல்

திருமதி சிவானந்தராஜா சிவபாக்கியம்

பிறப்பு : 18 Dec 1935                                                                                  இறப்பு : 10 Oct 2022

காரைநகர் இலந்தச்சாலையை பிறப்பிடமாகவும் SM கேணியடியை வசிப்பிடமாகவும் கொண்ட சிவானந்தராஜா சிவபாக்கியம் அவர்கள் 10.10.2022 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை (ஆசிரியர்) ராசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்றவர்களான மணற்பிட்டியைச் சேர்ந்த சிவப்பிரகாசம்(ஆசிரியர்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவப்பிரகாசம் சிவானந்தராஜா (RMP) அவர்களின் அன்பு மனைவியும்,

சிவகுமாரன்,சிவராஜன்,சிவரூபி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

யசோதரை,சிறிதா,மோகன்ராஜ் ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 11.10.2022 செவ்வாய்க்கிழமை அன்று காலை 8.00 மணியளவில் ஈமக்கிரியைகள் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைகளுக்காக சாம்பலோடை இந்து மாயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்: பிள்ளைகள்

தொடர்புகளுக்கு:
சிவகுமாரன் (கனடா) 647 330 9776 / 647 766 7495
சிவராஜா (கனடா) 416 274 3050 / 416 602 5536

1 comments

    • D Ganesan on October 12, 2022 at 1:32 am

    மிகவும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

    ஓம் சாந்தி.

Comments have been disabled.