மரண அறிவித்தல்
திருமதி.சிவபாக்கியம் நித்தியானந்தம்(பாலி ரீச்சர்)
(முன்னாள் ஆசிரியை, சுந்தரமூர்த்திநாயனார் வித்தியாலயம்)
பிறப்பு: 17.12.1956 இறப்பு: 12.11.2014
காரைநகர், களபூமியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.சிவபாக்கியம் நித்தியானந்தம் (பாலி ரீச்சர்) அவர்கள் இன்று புதன்கிழமை(12.11.2014) அன்று காரைநகரில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம்-சுந்தரம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா-செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும் நித்தியானந்தத்தின் ஆருயிர் மனைவியும் விநோதினியின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற சரஸ்வதி மற்றும் தனலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும் பரமநாதன், காலஞ்சென்ற சுப்பிரமணியம், லோகேஸ்வரி, பொன்னம்பலவாணர், காலஞ்சென்ற நடராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை வியாழக்கிழமை (13.11.2014) அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் பின்னர் தில்லை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
வீட்டு முகவரி: திக்கரை, களபூமி, காரைநகர்
தகவல்: நித்தியானந்தம்(கணவன், காரைநகர்)
தொடர்புகளுக்கு:
நித்தியானந்தம்(கணவர்) 0094-778725488(காரைநகர்)
லோகதாஸ்(பெறாமகன்) 0044-7960941988(லண்டன்)