காரைநகர் வலந்தலை ஸ்ரீ மடத்துக்கரை முத்துமாரி அம்மன் ஆலய பஞ்சதள இராஜ கோபுர மகாகும்பாபிஷேகம் எதிர்வரும் 31ம் திகதி புதன்கிழமை இடம்பெற உள்ளது.
ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட இராஜ கோபுரம் மற்றும் மணி மண்டபத்திற்கான கும்பாபிஷேகமே எதிர்வரும் 31ம் திகதி இடம்பெற உள்ளது.
இராஜ கோபுரத்தினை சுவிஸ் நாட்டில் வதியும் பரோபகாரி சுப்பிரமணியம் கதிர்காமநாதனும் மணிமண்டபத்தினைக் கலைமாடக்கோன் சண்முகம் சிவஞானமும் தங்களது உபயமகா அமைத்து வழங்கி உள்ளனர்.
நயினை நாகபூசனி அம்மன் ஆலய பிரதம சிவாச்சாரியார் சிவஸ்ரீ ப.முத்துக்குமாரசுவாமிக் குருக்கள் பிரதிஷ்டா பிரதம குருவாக இருந்து கும்பாபிஷேகத்தினை நிகழ்த்தி வைக்க உள்ளார்.காலை 9.49 மணி தொடக்கம் 11.10 மணி வரையுள்ள சுப வேளையில் மகா கும்பாபிஷேகம் இடம்பெற உள்ளது.