காரைநகர் கண்பார்வையற்ற இளைஞனின் குடும்பத்திற்கு உதவுங்கள்!

scan0001காரைநகர், களபூமி, பாலாவோடையைச் சேர்ந்த தற்போது வவுனியாவில் வசித்துவரும் கந்தசாமி ஐங்கரன் என்பவர் இரு கண்களையும் இழந்த நிலையில் தன் குடும்பத்தை வறிய நிலையில் ஓட்டி வருகின்றார். அவர் இரு கண்களையும் கடந்த யுத்தத்தின்போது முள்ளிவாய்க்கால் பகுதியில் இழந்துள்ளார். இவருக்கு மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர். ஆனாலும் தனது முயற்சியினால் ஈக்குப்பிடி அடித்தல், மற்றும் தும்புத்தடி உற்பத்தி செய்தல் போன்ற சுயதொழிலை மேற்கொண்டு தனது வருமானத்தை வவுனியாவில் வைத்து ஓட்டி வருகின்றார். 
ஆகவே இந்த இளைஞன் குடும்பத்திற்கு உதவ அனைத்துக் காரைநகர் உள்ளங்களும் முன்வரல் வேண்டும். அத்துடன் இளைஞனுக்கு கடந்த மாதமாக ஒரு கண்ணில் காய் வளர்ந்து அதை உடனடியாக சத்திரசிகிச்சை செய்யவேண்டிய தேவையும் உள்ளது. அதற்கு பெரும்தொகைப் பணமும் தேவைப்படுகின்றது.
ஆகவே கருணை உள்ளம் கொண்ட எமது இதயங்களின் வள்ளல்களே உடனடியாக இந்த இளைஞனுக்கு உதவ முன்வாருங்கள். இந்த இளைஞனுக்கு உதவும் வகையில்லண்டனில் கந்தையா பரமேஸ்வரன்(ராசன்) என்பவருடன் தொடர்பு கொள்ளமுடியும். கனடாவில் தம்பிராஜா ஜெயச்சந்திரன்(ஜெயா) அவர்களிடமும் தொடர்பு கொண்டு அதற்குரிய நிதியை வாரிவழங்கி இந்த இளைஞனின் வாழ்வில் ஒளியேற்ற முன்வாருங்கள்.

கனடா காரை கலாசார மன்றத்தின் ஊடாக உங்கள் பங்களிப்பை செய்யவும். 

 

 



DSC08233

Click to access AYNKARAN.pdf

scan0002scan0003scan0006scan0004scan0005