காரைநகர் அபிவிருத்திச் சபை நடாத்திய தைப்பொங்கல் விழா இன்று 14.01.2014 செவ்வாய்க்கிழமை நடைபெற்றது

மாணவர் நூலகத்தில் காலை பொங்கல் நிகழ்வும் மாலை கலை நிகழ்வுகளும் வெகுவிமரிசையாக இடம்பெற்றது. தலைவர் சிவா.தி.மகேசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் வே.தர்மரட்ணம்,காரைநகர் வைத்தியசாலை வைத்திய அதிகாரி வைத்தியக்கலாநிதி கே.இந்திரமோகன் ஆகியோர் விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.